Thursday, September 30, 2010

கிராம அளவில் வேளாண்பயிர் காப்பீடு திட்டம் தனியாரிடம் ஒப்படைக்க த.உ.மு எதிர்ப்பு!

கிராம அளவில் வேளாண் பயிர் காப்பீடுத் திட்டத்தை சில மாவட்டங்களில் நடைமுறைப் படுத்த இந்திய வேளாண் பயிர் காப்பீட்டு நிறுவனம் முன் வந்திருப்பதை தமிழக உழவர் முன்னணி வரவேற்பதாகவும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் கீழ்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றும்படி இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனத்தை வலியுறுத்த வேண்டும் என்றும் தமிழக உழவர் முன்னணி கோரி இருக்கிறது.

1.இக்காப்பீட்டுத்திட்டத்தை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவு படுத்த வேண்டும்.

2.இக்காப்பீட்டுத் துறையில் தனியாரை அனுமதிக்கக் கூடாது.

3.ஒரு கிராமத்தை அலகாகக் கொள்வது முன்னேற்றமே என்றாலும் “ஏக்கர்” வாரியாக பயிர்காப்பீடு செய்வதே உழவர்களுக்கு முழுமையான பலன் அளிக்கும் என்பதால் அடுத்து ஏக்கர் வாரியாக பயிர்காப்பீடு செய்யும் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

தமிழக உழவர்களுக்கு முழுமையாக பலனளிக்கக் கூடிய மேற்குறித்த கோரிக்கைகள் நிறைவேற மாண்புமிகு தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக உழவர் முன்னணி கோரியுள்ளது.

0 கருத்துகள்:

Post a Comment