Sunday, August 26, 2012
Tuesday, August 21, 2012
காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பீன்படி கர்நாடகத்திலிருந்து மாதந்தோறூம் நீரைப்பெற தமிழக அரசு தவறியதால் ஏற்பட்ட குறுவை சாகுபடி இழப்புக்கு ஏக்கருக்கு ரூ12,000/- இழப்பீடு கோரி தமிழக உழவர் முன்னணி சிதம்பரம் கோட்டாச்சியர் அலுவலகம் முன்பு 21.08.2012 காலை 11.30 மணி அளவில் மறியல் போராட்டம் நடத்தினர்,
8:13 AM
No comments
உழவர் முன்னணியின் கடலூர் மாவட்டச் செயலாளர் திரு.சி.ஆறுமுகம் தலைமையில் இம்மறியல் போராட்டத்தில் கலந்துக்கொண்ட 89 உழவர்கள் கைது செய்யப்பட்டனர்.
காவிரி தடுக்கும் கர்நாடகத்திற்கு
பொருளாதார தடை விதித்தும்
இந்திய அரசுக்கு எதிராக
வரி கொடாமை நடத்தியும்
காவிரி நீரைப் பெற்றுத் தராத
தமிழக அரசே! ஜெயா அரசே!
குறுவை காய்ந்து போனதற்கு
நீயே பொறுப்பு! நீயே பொறுப்பு
குறுவை சாகுபடி இழப்புக்கு
ஏக்கருக்கு 12ஆயிரம்
இழப்பீடு உடனே வழங்கு!
தானே புயல் காப்பீட்டு தொகையை
கடனுக்காக பிடித்தம் செய்யாதே
உழவர்களை வஞ்சிக்காதே!
பயீர்க்காப்பீட்டு தொகையினை
முழுமையாக உடனே வழங்கு!
தானே புயலால் பாதித்த
பயீர் கடன் முழுவதையும்
தள்ளுபடி செய்! தள்ளுபடி செய்!
என்ற முழக்கங்களோடு சிதம்பரம் பெரியார் சிலை அருகிலிருந்து தமிழக உழவ்ர் முன்னணியின் எழுச்சி பேரணி புறப்பட்டது.
மாவட்டச் செயலாளர் திரு.சி.ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற இப்பேரணியில் மாவட்டத் தலைவர் திரு.அ.கோ.சிவராமன்,மா.கோ.தேவராசன் மற்றும் பொறியாளர் செயபாலன், சரவணன், மதிவாணன், கென்னடி , இராசேந்திரன், நாராயணசாமி, ஆசிரியர் கோவிந்தராசன், பாலன், பொன்னுசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
பேரணியின் முடிவில் கோட்டாச்சியர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து மறியல் செய்த உழவர் 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
Wednesday, August 15, 2012
Subscribe to:
Posts (Atom)