Wednesday, December 5, 2012

கருகும் சம்பா பயிரைப் பாதுகாக்க -தமிழக உழவர் முன்னணி உண்ணாப் போராட்டம்



கருகும் சம்பா பயிரைப் பாதுகாக்க, காவிரி நீரை கர்நாடகம் நாள்தோறும் 2 டி.எம்.சி. அளவிற்குத் திறந்துவிட வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகஉழவர் முன்னணி சார்பில் சிதம்பரத்தில், இன்று(04.11.2012), காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாப் போராட்டம் நடைபெற்றது.


சிதம்பரம் பேருந்து நிலையம் காந்தி சிலை அருகில் நடைப்பெற்ற இப்போராட்டதிற்கு குமராட்சி தமிழக உழவர் முன்னணி ஒன்றியத் தலைவர்திரு தங்க. கேன்னடி தலைமையேற்றார். த.உ.மு. மாவட்டச் செயலாளர் திரு சி. ஆறுமுகம், மாவட்டத் தலைவர் திரு அ.கோ.சிவராமன், மாவட்டஒருங்கிணைப்பாளர் திரு மா.கோ.தேவராசன், கீரப்பாளையம் ஒன்றியச் செயலாளர் பொறியாளர் திரு என்.செயபாலன், மையக்குழு உறுப்பினர் திரு.இராசேந்திரன்,  திரு மதிவாணன், மாவட்டத் துனை செயலாளர் திரு சரவணன் உள்ளிட்ட திரளான உழவர் முன்னணிப் பொறுப்பாளர்களும்,உழவர்களும் இதில் பங்கேற்றனர். மாலையில் உண்ணாப் போராட்டத்தை நிறைவு செய்து பேசிய, தமிழக உழவர் முன்னணியின் ஆலோசகரும், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக்கட்சி பொதுச் செயலாளருமான தோழர் கி.வெங்கட்ராமன், “இரு முதலமைச்சர்கள் பேச்சு வார்த்தையில், ஒரு சொட்டுக் காவிரித் தண்ணீரும்திறந்து விட மாட்டோம் என கர்நாடக முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் அறிவித்தது தமிழ்நாட்டு உழவர்களை மட்டுமின்றி, ஒட்டுமொத்தத்தமிழினத்தையே இழிவுபடுத்தியதாகும்.

நேற்று(03.12.2012) காவிரி வழக்கு உச்சநீதிமன்றத்தில் வந்த போது, உச்சநீதிமன்ற நீதிபதி, நாங்கள் 20 அல்லது 25 டி.எம்.சி. திறந்து விட வெண்டும்என ஆணையிட்டால் கர்நாடகத்தின் நிலைப்பாடு என்ன என்று கேட்டார்கள். அதற்கு, கர்நாடகத் தரப்பு மூத்த வழக்குரைஞர் நாரிமன்அப்படியொரு ஆணையிட்டால் அதை கடுமையாக எதிர்ப்போம் என்று பதிலுரைத்தார். இருதரப்பு வாதங்களையு்ம் கேட்டு ஆவணங்களை ஆய்வுசெய்து ஆணைப் பிறப்பிக்க வேண்டிய நீதிமன்றம், நாங்கள் உத்தரவிட்டால் அதை செயல்படுத்துவீர்களா எனக் கேட்பது இதுவரையிலும்நீதிமன்றங்களில் நிகழாத இழிநிலையாகும். தமிழ்நாட்டிற்கு ஞாயம் வழங்குகிற போது மட்டும், எதிர்த்தரப்பை இவ்வாறு கேட்பதுஉச்சநீதிமன்றமும் தமிழகத்திற்கு எதிராக இருப்பதையே எடுத்துக் காட்டுகிறது. இந்திய அரசு கர்நாடகத்தின் அடாவடிக்கு துணைபோவதால்தான், இவ்வாறு அப்பட்டமான சட்ட மீறலில் கர்நாடகம் ஈடுபடுகிறது.

சட்டத்தின் ஆட்சி இந்தியாவில் செயல்படுவதாக இருந்தால், 1956 மாநிலங்களுக்கிடையேயான தண்ணீர் தகராறு சட்டப்படி, கர்நாடக காவிரிஅணைகளின் நிர்வாகப் பொறுப்பை இந்திய அரசு தற்காலிகமாக தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டு, நடுவர் மன்றத் தீர்ப்பின்படி, கர்நாடகத்திலிருந்து தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்து விட வேண்டும். அரசமைப்பு சட்டவிதி 355இன்படி, கர்நாடகத்திற்கு தண்ணீர்திறந்துவிடும்படி தாக்கீது அனுப்ப வேண்டும்.
தமிழக முதலமைச்சர் செயலலிதா, இனியாவது தனது அணுகுமுறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும். அனைத்துக் கட்சி மற்றும்அனைத்து உழவர் அமைப்புகளின் கூட்டத்தைக் கூட்டி, ஒட்டுமொத்த தமிழகத்தையும் தன்னோடு அணிதிரட்டிக் கொண்டு, “கர்நாடகத்தைப்புறக்கணிப்போம்” என்று செயலில் இறங்க வேண்டும். கர்நாடகத்திற்கு எதிராகப் பொருளாதார தடை விதிக்க வேண்டும். கர்நாடக அரசியோ,கர்நாடக தயாரிப்புப் பொருள்களோ தமிழகத்தில் நுழைய விடாமல் தடுக்க வேண்டும். கர்நாடக அமைச்சர்கள் தமிழகத்திற்கு வந்தால்,அவர்களை வரவேற்பதோ பாதுகாப்புக் கொடுப்பதோ கூடாது. நெய்வேலி மின்சாரத்தை கர்நாடகத்திற்கு செல்லதாமல் தடுத்து நிறுத்தவெண்டும். இந்திய அரசுக்கெதிராக அரசியல் மற்றும் பொருளியல் அழுத்தங்களை கொடுக்க வெண்டும். தமிழ்நாட்டு உழவர்கள் சோர்வடைந்துதற்கொலைப் பாதைக்குள செல்லாமல், நம்பிக்கையோடு போராட்டக் களத்திற்கு வர வேண்டும். நாம் ஒன்றிணைந்து போராடினால் காவிரியைமீட்க முடியும்” எனப் பேசினார்.

நிறைவில், திரு. சிவபுரி பொன்னுசாமி நன்றி நவின்றார். இந்நிகழ்வில், சிதம்பரம், கடலூர், பெண்ணாடம் பகுதிகளைச் சேர்ந்த உழவர்கள்திரளாகப் பங்கேற்றனர்.

Saturday, December 1, 2012


காவிரி டெல்டா பகுதிகளில் இன வெறியன் ஜெகதீஷ் ஷட்டர் கொடும்பாவி எரிப்பு!



சிதம்பரம்
கன்னட இன வெறியன் ஜெகதீஷ் ஷட்டர் கொடும்பாவி எரிப்புப் போராட்டம் சிதம்பரத்தில் இன்று காலை 11 மணியளவில், தமிழக உழவர் முன்னணி சார்பில்  நடைபெற்றது.

தமிழக உழவர் முன்னணி மாவட்டச் செயலாளர் திரு, சி.ஆறுமுகம் தலைமையில் ஏறத்தாழ 50-க்கும் மேற்பட்ட உழவர்கள் திரண்டு தெற்குவீதி - தெற்கு சன்னதி - சபாநாயகர் தெரு சீர்காழி முதன்மை சாலை சந்திப்பில் எழுச்சியுடன் போராட்டத்தை  நடத்தினர்.

கன்னட இன வெறியன் ஜெகதீஷ் ஷட்டர் ஒழிக! காவிரி மறுக்கும் ஜெகதீஷ் ஷட்டர்  ஒழிக!என்னும் கோபம் கொப்பளிக்கும் உணர்ச்சி முழக்கங்களுக்கிடையில் ஜெகதீஷ் ஷட்டர்  உருவப் பொம்மை எரியூட்டப்பட்டது. கொழுந்துவிட்டு எரிந்த உருவ பொம்மை எரிந்து முடியும் வரை உழவர்கள் முழக்கம் எழுப்பிக்கொண்டே இருந்தனர். 




தமிழக உழவர் முன்னணி தலைவர், அ.கோ.சிவராமன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மா.கோ.தேவராசன், திரு.மதிவாணன், திரு.தங்க,கென்னடி, திரு,சரவணன், மு,முருகவேல் மு.சம்மந்தம் உள்ளிட்ட பலர் பங்கேற்ற  இப்போராட்டத்தில் சாலையோரம் நின்றிருந்த உணர்வாளர்களும் தன்னிச்சையாக தங்களையும் இணைத்துக்கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.


தஞ்சை
தஞ்சை பழையப் பேருந்து நிலையம் அருகில் காலை 11 மணியளவில், காவிரி உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தலைவருமான தோழர் பெ.மணியரசன் தலைமையில் கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் உருவகொடும்பாவியைக் கொளுத்தினர். பலர் கோவம் தாங்காமல் உருவ பொம்மையை செருப்பால் அடித்தனர்.


இப்போராட்டத்தில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு, தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் பழ.இராசேந்திரன், நா.வைகறை, த.தே.பொ.க. தஞ்சை நகர செயலாளர் தோழர் இரா.சு.முனியாண்டி, பூதலூர் ஒன்றிய செயலாளர் க.காமராசு, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் நல்லதுரை, தமிழக விவசாயிகள் சங்கம் தஞ்சை மாவட்டச் செயலாளர் செங்கொடிச் செல்வன், மாவட்ட இணைச் செயலாளர் ஜெகதீசன், திருவாரூர் மாவட்டச் செயலாளர் இரா.மோகந்தாசு உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் தமிழின உணர்வாளர்கள் இக்கொடும்பாவி கொளுத்தும் போராட்டத்தில் கலந்துக் கொண்டனர்.


திருத்துறைபூண்டி
திருத்துறைபூண்டி பேருந்துநிலையம் திருவள்ளூவர் சிலை அருகில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ஒன்றிய செயலாளர் இரா.தனபால் தலைமையில் கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் உருவ கொடும்பாவி கொளுத்தப்பட்டது. போராட்டத்தில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ஒன்றிய செயற்குழு உறுப்பினர் தோழர் க.அரசு, வழக்கறிஞர் இ.தனஞ்செயன், தமிழக உழவர் முன்னணி தோழர் ச.கோவிந்தசாமி உள்ளிட்ட திரளான தமிழின உணர்வாளர்கள் கலந்துக் கொண்டனர்.


காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் நடைபெற்ற, கன்னட இனவெறியன் ஜெகதீஷ் ஷெட்டர் கொடும்பாவி எரிப்புப் போராட்டம், தமிழ் மக்களின் கொந்தளிப்பை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

 


Wednesday, November 7, 2012

தலைஞாயிறு சர்க்கரை ஆலை போராட்டம் வெற்றி!



உழவர்கள் கொடுத்த கரும்புக்கு எட்டு மாதங்களாக கொடுக்கப்படாத
தொகையைக் கேட்டு தலைஞாயிறு என்.பி.கே.ஆர்.ஆர். சர்க்கரை ஆலையில்
உழவர்கள் உள்ளிருப்பு போராட்டம் வெற்றி!
தலைஞாயிறு சர்க்கரை ஆலை உழவர்கள் விளைவித்துக் கொடுத்த கரும்புக்கான பணத்தைக் கொடுக்காமல் கடந்த 8 மாதங்களாக உழவர்களை
வஞ்சித்து வந்த்து.
ஏற்கனவே ஆலையில் இயங்கி வந்த சங்கமும் ஆலையோடு கூட்டணி
வைத்துக் கொண்டு ஏய்த்துக் கொண்டிருந்த்து.
இதையறிந்த உழவர்கள் தன்னெழிச்சியாக களமிறங்கி ஆலைக்குள்
உள்ளிருப்பு போராட்ட்த்தை துவக்கினர். சர்க்கரை லாரிகள் வெளியே
செல்வதை தடுத்து நிறுத்தினர்.போராட்ட்த்தின் விளைவாக தமிழக அரசு
ரூ.17,34,62,000-ஐ ஆலைக்கு ஒதுக்கியுள்ளதாக அறிவித்த்து.
ஆலை 8 மாதமாக பண்ம் வழங்காத்தால் கூட்டுறவு வங்கிகள் வசூலிக்க்க்
கூடிய வட்டியை ஆலையே ஏற்க வேண்டும் என்ற நிபந்தனையுடன்
உழவர்கள் 6.11.12 அன்று போராட்ட்த்தை திரும்ப பெற்றனர்.
போராட்ட்த்தில் மற்ற உழவர்களுடன் தமிழக உழவர் முன்னணியின் நாகை மாவட்ட அமைப்பளர் திரு.கார்த்திகேயன் முன் நின்று பணியாற்றினார்.
த.உ.மு.கடலூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் நேரில் சென்று வாழ்த்தினர்.
கட்சி வேலிகளைக் கடந்து உழவர்கள் போராடினால் வெற்றிப் பெறலாமென்பதை மீண்டும் தலைஞாயிறு போராட்டம் உறுதிப்படுத்தியது.