Friday, October 29, 2010

கரைபுரண்டு ஓடினாலும் காவிரி நீர் கிடையாது!கர்நாடக அரசு கதவை சாத்தியது, இயலாத ஆட்சி நடத்தும் தமிழக அரசே! பொதுப்பணித்துறை அலுவலகத்தை இழுத்து மூடு!



கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா தலைமையில் 27.10.2010 அன்று நடைப்பெற்ற கர்நாடக அனைத்துக்கட்சிக் கூட்டம் “காவிரி நீரை திறந்து விடவே முடியாது; அணை நிரம்பி வழிந்தால் தானாகவே தமிழகதிற்கு நீர் ஓடும்”,என்று அறிவித்துள்ளது.

அனைத்துக்கட்சி கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக நீர் வளத்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை “12408 அடி மொத்த உயரமுள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையில் 124.7 அடிக்கு தண்ணீர் உள்ளது.கர்நாடக கவிரி அணைகளில் மொத்த கொள்ளளவான 114 டி.எம்.சியில் 100 டி.எம்.சி.தண்ணீர் நிரம்பியுள்ளது.ஆயினும் இதை கர்நாடகதின் பாசன மற்றும் பெங்களூர்,மைசூர் குடிநீர் பயன்பாட்டிற்கு எடுத்துக்கொள்வோம்.தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்து விடுவது என்ற பேச்சுக்கே இடமில்லை.அணை நிரம்பினால் இயற்கையாக தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வழிந்து ஓடும்”என்று அறிவித்தார்.

இயலாத ஆட்சியாய் தமிழக அரசு இருப்பதால் அயலார் காவிரி உரிமையை எளிதாக மறுக்கிறார்கள்.

நடுவர் மன்ற இடைக்காலத்தீர்ப்பின்படி தமிழகத்திற்குரிய காவிரிநீரை பெற்றுத்தர முயலாத,தமிழக அரசின் பொதுப்பணித்துறை அலுவலகங்கள் தமிழகத்தில் செயல்படுவதால் இருக்கிற தண்ணீருக்கு உழவர்களிடையேயும்,உழவர்களுக்கும் பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு இடையேயும் அடிக்கடி தகராறு ஏற்படுவதைத் தவிர வேறு எதுவும் நிகழப்போவதிலை.

எனவே காவிரி நீரைப்பெற்றுத்தர இயலாத தமிழக அரசு பொதுப்பணித்துறை அலுவலகங்களை இழுத்து மூடும்படி தமிழக உழவர் முன்னணி வலியுறுத்துகிறது.

-------------------------------------------------------------------------------------
இரு மாநிலங்களுக்கு இடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்பட நான் இடம்தர விரும்பவில்லை --- முதலமைச்சர் மு.கருணாநிதி.
------------------------------------------------------------------------------------------நன்றி : தினமணி 29.10.2010

Sunday, October 17, 2010

வீராணம் ஏரி பாசன,கடைமடை கிராமங்கள் போதுமான நீரின்றி பயிர்கள் காய்வதற்கு தமிழக உழவர் முன்னணி கண்டனம்


வீராணம் பாசன பகுதி உழவர்கள் குறுவைப்பயிரை இழந்து பல வருடங்களாகிவிட்டன.
பயிரிடப்படும் சம்பா பயிருக்கும் காலம் கடந்துதான் வீராணம் ஏரி நீர் திறந்துவிடப்பட்டது.

பாசனத்திற்கு போதுமான அளவு நீர் திறந்துவிடாததாலும் பாசன வாய்க்காலில் உள்ள செடி,கொடி,புதர்கள் அகற்றப்படாததாலும் கீரப்பாளையம்,மேலமூங்கிலடி, தையாக்குப்பம், கான்சாகிப்மண்டபம்,அம்பலத்தாடி குப்பம், மேலசொக்கனாதன்பேட்டை, பாலூத்தாங்கரை, கீழமூங்கிலடி,வாள்காரமேடு,கண்ணங்குடி,மடப்புரம் போன்ற கடைமடை கிராமங்களில் உள்ள நாற்றங்கால்களும் காய்ந்து வருகின்றன.நடவுக்கு போதிய நீரில்லை.நாற்றுக்கும் வயது ஏறிக்கொண்டிருக்கிறது.இதனால் உழவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் விழிப்பிதுங்கி நிற்கின்றனர்.

எனவே உழவர்களுக்கு ஏற்படவுள்ள பெரும் நட்டத்தை தவிர்க்க கடைமடை பகுதிகளுக்கு தடையின்றி தேவையான நீர் கிடைக்க பாசன வாய்க்காலில் உள்ள செடி,கொடி,புதர்களை அகற்றவும்,ஏரியிலிருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கும்படி கடலூர் மாவட்ட ஆட்சியர் அவர்களை தமிழக உழவர் முன்னணி கோரியுள்ளது.