Sunday, May 8, 2011

காவிரி, பாலாற்றுப்படுகை இயற்கை எரிவளி,பெட்ரோலிய வளங்களை அம்பானி குடும்பம் கைப்பற்றியது


8600 ச.கி.மீ பரப்புள்ள காவிரி-பாலாற்றுப் படுகையை ரிலையன்சு இண்டியா கம்பெனிக்கு தாரை வார்த்துள்ளது இந்திய அரசு.

இப்பகுதியில் அதிக அளவில் இயற்கை எரிவளியும் கச்சா எண்ணெய்யும் இருப்பதைக் கண்டறிந்துள்ள ரிலையன்சு இங்குள்ள பெட்ரோல் வளத்தை எடுப்பதில் ஈடுபடும் உரிமையை 100 விழுக்காடு தன்னிடமே வைத்துள்ளது.

பெட்ரோலிய வளங்கொழிக்கும் தமிழ் மண்ணான இப்பகுதிக்கு துருபாய்-53 என தன் தந்தையின் பெயரைச் சூட்டி மகிழ்கிறது வடஇந்திய அம்பானி நிறுவனம்.

மாடுலர் டைனமிக் டெஸ்டிங் (M.D.T) ட்டிரில் ஸ்டெம் டெஸ்டிங் (D.S.T) போன்ற ஆய்வுகள் பலமுறை செய்ததில் இப்பகுதியில் இயற்கை எரிவளியும், கச்சா எண்ணெய்யும் பெருமளவில் இருப்பது உறுதியானது.

மாடுலர் டைனமிக் டெஸ்டிங் (M.D.T) எனும் ஆய்வு செய்தபோது 37 மில்லியன் ஸ்டாண்டர்ட் கன அடி எரிவளியும் 1100 பாரல் கச்சா எண்ணெய்யும் 56/64 அங்குலம் அளவுள்ள குழாய் மூலம் ஒரு நாளைக்கு கிடைத்தது என்றால் இப்பகுதி பெட்ரோலிய வளத்தை கற்பனை செய்து பார்த்துக் கொள்ளுங்கள்.

தமிழக உழவர்கள் காவிரி, பாலாற்று நீரை மட்டும் இழக்கவில்லை, இவ்வாற்றுப் படுகைகளின் பெட்ரோலிய வளத்தையும் இழந்து நிற்கின்றனர்.

தமிழகத்துக்கு தேவையான பெட்ரோலிய பொருட்கள் தமிழ் மண்ணில் கிடைத்தும் புது தில்லியை விட அதிக விலை கொடுத்து வாங்கும் நிலையில் உழவர்கள் வைக்கப்பட்டுள்ளனர்.

புதிதாய் சிந்திப்போம்! போராடப் புறப்படுவோம்!