Saturday, September 4, 2010

ஆலைகளின் வேதியியல் கழிவுகளால் பாதிக்கபட்ட உழவர்கள் மீது கடலூர் காவல்துறை வழக்கு


கடலூர் சிப்காட் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் வேதியியல் கழிவுகளால் நிலமும்,நீரும்,காற்றும் பாதிக்கப்படுவதை எதிர்த்து உழவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.ஆனால் அரசும் அதிகார வர்க்கமும் அசைவற்று இருந்து வருகின்றன.
அண்மையில் பாசன வாய்க்காலில் திறந்து விடப்பட்ட வேதியியல் ஆலைகழிவுகள் சங்கொலிகுப்ப கிராம பகுதியில் 50 ஏக்கருக்கு மேற்பட்ட விளை நிலங்களை பாதித்துள்ளது;வேதியியல் கலந்த நீரைக் குடித்த இரண்டு மாடுகள் இறந்துள்ளன என்பதற்காக உழவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் வேறு வழியின்றி சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.சம்மந்தப்பட்ட ஆலைகளின் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக கடலூர் முதுநகர் காவல்துறை போராடிய மக்கள் மீது வழக்கு பதிந்துள்ளது.இதை தமிழக உழவர் முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.தமிழக உழவர் முன்னணி
1.பொதுமக்கள் மீது போடப்பட்ட வழக்கை திரும்ப பெற வேண்டும்
2.வேதியியல் கழிவுகளை தூய்மைப்படுத்தாமல் வெளியேற்றும் ஆலைகளின் உரிமத்தை நீக்க வேண்டும்
3.புதிய வேதியியல் ஆலைகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது என தமிழக அரசைக் கோருகிறது.

0 கருத்துகள்:

Post a Comment