Friday, December 31, 2010

காவிரி சிக்கல் இனப்பகையால் வருவது;கிருஷ்ணா நதிநீர் தீர்வு இன ஒற்றுமையால் விளைவது;



வெளியாகியுள்ள கிருஷ்ணா நதி நீர் நடுவர்மன்ற தீர்ப்பின்படி ஆந்திரா 1001 டி.எம்.சி. தண்ணீரும் கர்நாடகம் 911 டி.எம்.சி. தண்ணீரும்
மகாராஷ்டிரா 666 டி.எம்.சி தண்ணீரும் பெறுகின்றன.

தீர்ப்பின் படி ஆந்திர மாநிலத்திற்கு கூடுதல் தண்ணீர் கிடைத்திருந்தாலும் மற்ற மாநிலங்கள் பெரும் எதிர்ப்பு ஏதும்மின்றி ஏற்றுக் கொண்டிருகின்றன.மகிழ்ச்சி தெரிவித்துள்ளன.

காவிரி நடுவர்மன்ற இடைக்காலத்தீர்ப்பு தமிழகத்திற்கு வெறும் 205 டி.எம்.சி நீரை மட்டுமே வழங்கியது,(தமிழகம் 489 டி.எம்.சியை கோரியது)காவிரி நடுவர் மன்றம் தனது இறுதி தீர்ப்பில் அதையும் குறைத்து 176 டி.எம்.சி நீரை ஒதுக்கி தமிழகத்தை வஞ்சித்தது.

தமிழகத்தை கேவலமாக வஞ்சித்த இந்த தீர்ப்பைக்கூட கர்நாடகம் ஏற்கவில்லை.ஒரு சொட்டு தண்னீர் கூட தமிழகத்திற்கு தரமாட்டோம் என்று கர்நாடகம் வெளிப்படையாக சட்டமன்றத்தில் அறிவிக்கிறது.தமிழகத்திற்குள் வழிந்து வரும் (ஒகேனக்கல்) தண்னீரை குடிநீருக்கு பயன்படுத்துவதை கூட கர்நாடகம் எதிர்க்கிறது.

வழக்கின் ஒவ்வொரு கட்டத்திலும் இந்திய அரசு கர்நாடகத்திற்கு துணையாகவே செயல்பட்டது.தமிழகத்தை ஆண்டவர்கள் தமிழக நலனை பலிகொடுத்து தங்களை வளப்படுத்திக் கொண்டனர்.

காவிரி சிக்கலில் கர்நாடகத்திற்கு துணை நிற்பது போலவே பாலாற்று சிக்கலில் ஆந்திராவுக்கும்,முல்லை பெரியாறு அணை சிக்கலில் மலையாளிகளுக்கும் இந்தியா வெளிப்படையாகவே உதவிசெய்கிறது.

அனைவருக்கும் ஏன் தமிழினத்தின் மீது இவ்வளவு பகை?தமிழகத்தின் மீது இந்தியாவும் அதன் வழிவந்த மாநிலங்களும் காட்டும் இனப்பகையை தமிழக உழவர்கள் புரிந்து கொண்டால் மட்டுமே தமிழக ஆற்றுநீர் சிக்கல்களுக்கு தீர்வு ஏற்படும்.
-------------------------------------------------------------------------------------------------------------
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல். -------------------------------------------------------------------------------------------------------------

0 கருத்துகள்:

Post a Comment