Tuesday, January 11, 2011

சுற்றறிக்கை 1/11

அன்புள்ள வேளாண் பெருமக்களே!

தமிழக உழவர் முன்னணி சார்பில் இனிய தமிழ்ப்புத்தாண்டு,பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.10.1.11 அன்று த.உ.மு யின் செயற்குழு கூட்டம் தலைவர் அ.கோ.சிவராமன் தலைமையில் நடந்தது.கீழ்காணும் முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.

1.) 3.1.11 அன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் நம் கிளைகள் உள்ள ஊர்களிலிருந்து அதிக எண்ணிக்கையில் உழ்வர்கள் கல்ந்துக்கொண்டனர்.நாம் விளைவிக்கும் வேளாண் பொருட்களுக்கு இலாபமான விலை கிடைத்தால் தான் ஆள் பற்றாக்குறை, கூலி உயர்வு,இடுபொருள் விலையேற்றம்,நம் வாழ்க்கைச் செலவுகளின் கட்டுக்கடங்காத உயர்வு ஆகியவற்றை சமாளிக்க முடியும்; நம் மண்ணையும்,வேளாண்மையையும் காக்க முடியும் என்ற உண்மையை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.இந்த சிந்தனையை உழவர்களிடையே போதிய அளவு நாம் ஏற்படுத்தவில்லை என்பதையே ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டவர்களின் எண்ணிக்கை காட்டியது.ஆகவே ஊரில் உள்ள அனைத்து உழவர்களும் தம் சொந்த முயற்சியில் இது போன்ற நிகழ்வுகளில் கலந்துக்கொள்ள வேண்டும் என்ற உணர்வை உருவாக்குவதிலும் புதிய கிளைகள் அமைப்பதிலும் ஒவ்வொரு உறுப்பினரும் ஈடுபட வேண்டும்.

2.) 12.1.11 நாளிட்ட ஜூனியர் விகடன் நம் அமைப்பு போன்ற பெயரை (தமிழ் உழவர் முன்னணி) பயன்படுத்தி இழிவான் கட்டுரை வெளியிட்டிருக்கிறது.அதுகுறித்து ஜூனியர் விகடனுக்கு மறுப்பறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.அதை அவர்கள் அடுத்த இதழில் வெளியிடாவிட்டால் சட்டப்படியான நடவடிக்கை எடுப்பது என முடிவு செய்யப்பட்டது.

3.) விளைவித்த நெல்லை விற்க இயலாமல் உழவர்கள் கலங்கி நிற்கின்றனர். விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.தமிழக அரசு குடிமைப் பொருள் அங்காடி,மருத்துவமனை ,சிறைச்சாலை,போன்ற தேவைகளுக்காக மத்திய தொகுப்பிலிருந்து (பஞ்சாப்,ஒரிசா அரிசி) அரிசி வாங்கக் கூடாது என்றும் ஆந்திரா,கர்நாடகம் போன்ற அண்டை மாநிலங்கள் தங்கள் சந்தைக்காடாக தமிழகத்தை மாற்ற அனுமதிக்கக் கூடாது என்றும் தமிழகத்தின் தேவைக்கான நெல்லை தமிழக உழவர்களிடமே கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் தொடர்ந்து பல ஆண்டுகளாக நம் வற்புறுத்தி வருகிறோம்.தமிழக சந்தையை பாதுகாக்கும் நடவடிக்கையை உடனே எடுக்கும்படி தமிழக அரசை கோருகிறோம்.இக்கருத்தை உழவர்களிடையே நாம் பரப்ப வேண்டும்.

4.)அறுவடை தொடங்கி இருப்பாதால் அரசு உடனடியாக கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும்

5.) நிதி பற்றாக்குறை தொடர் நிகழ்வாக இருந்து வருகிறது நம் செயற்பாட்டிற்கு ஏற்ற நிதி வரத்து இல்லை.ஆகவே அவரவர் ஊர்களில் அறுவடை தொடங்கியதும் செயலாளரை தொடர்புக் கொண்டு நிதி திரட்ட வேண்டும்.ஒவ்வொரு உறுப்பினரும் குறைந்தது ரூ.100-/ கொடுக்க வேண்டும் என்ற உணர்வை நாம் ஏற்படுத்த வேண்டும்.

எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் செயல்வடிவம் பெற அனைத்து உறுப்பினர்களும் பணியாற்ற வேண்டுமென மீண்டும் கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு
சி.ஆறுமுகம்
செயலர்

0 கருத்துகள்:

Post a Comment