Tuesday, August 17, 2010

உழவர்கள் விழிப்படைய வேண்டும்!!

06/07/2010 ல் விருத்தாசலத்திலும் 12/08/2010 ல் சிதம்பரத்திலும் நடந்த உளுந்து,பயிர் வேளாண்மை தொடர்பான அரசு ஏற்பாடு செய்த விவசாய கருத்தரங்கில் கலந்துக் கொண்ட விவசாய அமைப்புகளின் தலைவர்கள் மேட்டூர்,கல்லணை,கீழணை,வீராணம் ஏரி ஆகியவற்றிலிருந்து தண்ணீரை உடனே திறந்து விட கோரினார்களேயன்றி காவிரியில் இடைகாலத் தீர்ப்பின் படி மாதந்தோறும் கர்நாடகத்திடமிருந்து தமிழகம் பெற வேண்டிய நீர் குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை.தமிழக உழவர் முன்னணி சார்பில் கலந்துக் கொண்ட செயலர் சி.ஆறுமுகம், கீரப்பாளையம் ஒன்றிய செயலர் என்.ஜெயபாலன் மட்டுமே கருத்தரங்கில் காவிரி உரிமை குறித்து புள்ளி விவரங்களுடன் பேசி தங்கள் கருத்தை பதிவு செய்தனர்.உழவர்கள் கட்சி வேலிகளைக் கடந்து உழவர்களாய் சிந்திக்க வேண்டும்.

0 கருத்துகள்:

Post a Comment