Monday, December 6, 2010

சிதம்பரம்,காட்டுமன்னார்கோயில், திருச்சி நெடுஞ்சாலை அமைப்பது தொடர்பாக


சிதம்பரத்திலிருந்து காட்டுமன்னார்கோயில்,செயங்கொண்டம்,
திருச்சி சாலை (எண் 227) தேசிய நெடுஞ்சாலை துறையால் இருவழி பாதையாக மாற்றப்பட இருப்பதாக அறிகிறோம்.


சாலை அகலப்படுத்தப்படுவதை தமிழக உழவர் முன்னணி வரவேற்கிறது.

சிதம்பரத்திலிருந்து காட்டுமன்னார்கோயில் வரை தற்சமயம் புழக்கத்தில் சாலையின் இருபுறமும் பாசனம் (வடக்கு ராசன் வாய்க்கால்,வெள்ளியங்கால் ஓடை,கான்சாகிப் வாய்க்கால்) மற்றும் வடிகால் வாய்கால்கள் செல்லுகின்றன.

இருவழிசாலை அமைக்கும் பொழுது பாசன்,வடிகால்
வாய்கால்களின் அகலம் பாதிக்கப்படாமல் அமைக்கும்படி கோருகிறோம்.

ஏற்கனவே சிதம்பரம் புறவழிச்சாலையின் தடுப்பாலும்,ஆங்காங்கே உருவாகியுள்ள நகர்களாலும் வெள்ளநீர் வடிவது பாதிக்கப்பட்டு பயிர்களுக்கு கடும் சேதம் ஏற்பட்டு வருகிறது.சாலையின் விரிவு காரணமாக பாசன வடிகால் வாய்க்கால்களின் அகலம் குறைக்கப்பட்டால் சேதத்தின் கடுமை மேலும் அதிகமாகும்.

ஆகவே உழவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சாலையை விரிவு படுத்தும்படி கேட்டுக்கொள்கிறோம்.

0 கருத்துகள்:

Post a Comment