Friday, September 28, 2012

சிதம்பரத்தில் தொடர்வண்டி மறியல்!



காவிரி உரிமை மீட்க அக்டோபர் 4  வியாழன் அன்று சிதம்பரத்தில் தொடர்வண்டி மறியல்!
காவிரி மீட்புக்குழு கூட்டத்தில் முடிவு.

சிதம்பரத்தில் காவிரி உரிமை மீட்பு குழு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு தமிழக உழவர் முன்னணி ஆலோசகர் திரு, கி.வெங்கட்ராமன் தலைமை தாங்கினார்.

தமிழ்த்தேசப் பொதுவுடைமைக்கட்சி  நகர செயலாளர் திரு. கு சிவப்பிரகாசம், தமிழக உழவர் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு, மா.கோ.தேவராசன். தலைவர், கோ.சிவராமன் செயலாளர், சி.ஆறுமுகம், தமிழர் தேசிய இயக்கம் திரு.வை.இரா.பாலசுப்பிரமணியம் , மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக நகர செயலாளர்,  திரு.லெ.சீனுவாசன்,  தமிழக இளைஞர் முன்னணி நகர அமைப்பாளர், திரு ஆ.குபேரன், நாம் தமிழர் கட்சி  நகர ஒருங்கிணைப்பாளர் திரு,புகழேந்தி, தமிழக மாணவர் முன்னணி செயலாளர், திரு வே.சுப்ரமணிய சிவா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அதன் பின்னர் கூட்ட முடிவுகள் குறித்து திரு, கி.வெங்கட்ராமன், வெளியிட்டுள்அறிக்கையில்  குறிப்பிட்டுள்ளதாவது-

காவிரியில் தமிழகத்துக்கு உரிய சட்ட உரிமை மறுக்கப்பட்டு வருகிறது. இந்த பிரச்சினையில் இந்திய அரசு தனது பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறது. கர்நாடகத்தின் அடாவடிக்கு துணை போகிறது. இதனால் தமிழகத்தில் 5 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி பொய்த்து விட்டது. மேலும் 16 லட்சம் சம்பா சாகுபடியும் கேள்விக்குறியாகும் நிலை உள்ளது.

காவிரியில் தமிழகத்தின் உரிமையை மீட்பதற்காகவும், தண்ணீரை பெறுவதற்காகவும், கடலுர்  மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு விவசாய சங்கங்கள், கட்சிகள், அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகள் சந்தித்து விவாதித்தோம்.

தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசை கண்டித்தும்,   கர்நாடக அரசு அக்டோபர் 30-ந்தேதி வரை தினமும் 2 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்துக்கு வழங்க கோரியும்  சிதம்பரம் மற்றும் அருகில் உள்ள கிராமங்களில் வரும் 1 ஆம் தேதி முதல் 3 ஆம் தேதி வரை பரப்புரை மற்றும் தெருமுனை கூட்டங்கள் நடத்தப்படவுள்ளது.   வருகிற  அக்டோபர்  4-ந் தேதி வியாழன் காலை சிதம்பரத்தில் காவிரி உரிமை மீட்பு குழு சார்பில்  அனைத்துக் கட்சிகள், உழவர் அமைப்புகள் பங்குபெறும்  ரெயில் மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இம்மறியல் போராட்டத்தில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, ம.தி.மு.க, நாம் தமிழர் கட்சி, தமிழக உழவர் முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் திரளாகப் பங்கேற்கின்றனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
  

                         காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில்,

0 கருத்துகள்:

Post a Comment